Sunday, September 23, 2007

முதலில் ஒழிக்க பட வேண்டியது சாதிகாளா? அல்லது மதங்களா?

நண்பர் ஒருவர் ஓர்குட்டில் கேட்ட வினாவும் அதற்கான எனது பதிலும் என்னை "சாதிகள் இல்லையடி பாப்பா" என்ற இந்த வலைதளத்தை ஆரம்பிக்க தூண்டியது...

அவரது வினா...

முதலில் ஒழிக்க பட வேண்டியது சாதிகாளா? அல்லது மதங்களா??

அவர் அவரது கருத்தை பின்வருமாரு பதிவு செய்திருந்தார்... சாதிகள் ஒழிக்க பட வேண்டியவை தான் ஆனால் அதர்க்கு முன் மதங்கள் ஒழிக்க பட வேண்டும். சாதிகள் இயங்க காரணமே மதங்கள் தான்.மதங்களை ஒழிக்க நாம் ஒன்று பட வேண்டும். சாதிகளை ஒழிக்க வேண்டும்என்று பலர் ஆதரவு கூறுவார்கள் ஆனால் சாதிகள் தோன்ற காரணமே மதங்கள் தான் என்பதைஅனைவரும் மறந்துவிட்டார்கள். மதங்கள் ஒழிக்க குரல் குடுக்க மாட்டார்கள்.

அவரது பார்வையில் மதங்கள்தான் முதலில் ஒழிக்கப்பட வேண்டுமென தோன்றியிருக்கிறது. ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை. என்னைப் பொருத்தவரை முதலில் ஒழிக்கப்பட வேண்டியது சாதிகளே...

சாதிகள் ஒழிக்கப்பட்டால் மதங்கள் தானாகவே மறைந்துவிடும் என்று கருதுகின்றேன். சாதிகளை ஒழிக்க வேண்டுமெனில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும்...

சுயமரியாதை பேசும் நாம் இன்றும் நம் மதம் (விருப்பம் இல்லாவிட்டாலும்) இந்து மதம் என்றுதானே சாதிச்சான்றிதழில் பயன்படுத்தி வருகின்றோம்... பிறகு இந்து மதத்திற்குள் உள்ள சாதிகளைகளை ஒழிக்காமல் இந்து மதத்தை எவ்வாறு ஒழிப்பதாம்??

நாம் இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்பதனால் நம் மதத்திற்குள் உள்ள சாதிய வேறுபாடுக்ளை ஒழிக்க வேண்டும்...

கடவுள் இல்லை என்று சொல்வதால் சாதிய ஏற்றத்தாழ்வை முழுமையாக ஒழிக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். கடவுளை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பமாக இருக்கட்டும். கடவுளை நம்பாதவர்களுக்கு கோவிலுக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் கடவுளை நம்புபவர்களுக்கு அந்த கடவுள் பொதுவானதாக எல்லோராலும் எந்த தடையுமின்றி எளிதில் தரிசிக்கக்கூடியதாக இருக்க வேண்டுமல்லவா?? அவர்களின் கடவுள் நம்பிக்கையை முட்டாள்தனம் என்று சொல்வதைவிட அவர்களின் நம்பிக்கைய/கடவுளை தாம் கோவிலினுள்ளே சென்று வழிபடவேண்டும்/பூசை செய்ய வேண்டும் என்ற ஏக்கத்தை நிறைவேற்றினால் நமக்கு வெற்றி கிட்டும் என நினைக்கிறேன்...

சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டுமென்றால் கடவுளை பாரபட்சமின்றி அனைவரும் வழிபடலாம்/அனைவரும் கோவிலின் கருவரைக்குள் சென்று பூசை செய்யலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்...

சாதிய வேறுபாட்டை உண்மமயிலேயே ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் தனது வீட்டிலிருந்து, தனது ஊரிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வோமேயானால் கண்டிப்பாக நம் வாழ்நாளுக்குள் குறைந்த பட்சம் வேறுபாடற்ற சமூகத்தை நாம் உருவாக்கிவிடலாம். இவ்வாறு சாதிய வேறுபாடுகள் ஒழியும்போது சாதிகள் தானாகவே மறையும். நம் சந்ததிகள் சாதிகளற்ற சமுதாயத்தில் வாழ்வார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை...

இவ்வாறு இந்து மதத்தில் சாதிய வேறுபாடுகள் மறையும்போது அதன் தாக்கம் மற்ற மதங்களிலும் ஏற்படும். ஒவ்வொரு மத்திலும் இவ்வாறானா வேறுபாடுகள் அகற்றப்பட்டால் மதங்களும் மறையும்...

சாதிகளை ஒழிக்கும் வழிமுறைகள் எவை எவ்வாறு அவற்றை நடைமுறைக்கு கொண்டுவருவது என்பதைப் பற்றி இந்த வலைதளத்தில் எனது கருத்துக்களை பதியலாம் என இந்த வலைதளத்தை துவங்கியுள்ளேன்...

நண்பர்களே! உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

அன்புடன்...
சக்தி

No comments: