Monday, September 24, 2007

சாதிகள் இல்லையடி பாப்பா!

இந்த வாரம் ஆனந்தவிகடன் இதழில் வெளியான கட்டுரை சாதிகளை ஒழிக்க ஒரு வழி சொல்கிறது...

அதாவது, தமிழகத்தைப் பொருத்தவரை மலைச் சாதியினர்/தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற வகுப்பினர் என்ற நான்கு பிரிவுகளைப் அடிப்படையிலேயே அரசு சலுகைகள் அமைகின்றன. சாதியோ அதன் உட்பிரிவோ இதற்குத் தேவைப்படுவதில்லை! எனவே, "இனி வருவாய்த் துறையினர் தருகின்ற சான்றிதழ், சாதியைக் குறிக்கும் சான்றிதழாக இருக்காது. மேற்கண்ட நான்கில் ஒரு பிரிவைக் குறிப்பிடும் சான்றிதழாகத்தான் இருக்கும் என்பதையே சட்டமாக்கி, அதை முழுமையாக அமல்படுத்தலாம்" எனப் பரிந்துரைக்கிறது அந்த கட்டுரை...

இதை அரசாங்கம் சட்டமாக்கி நடைமுறைப்படுத்தினால் இதுவே சட்டப் பூர்வமாக சாதிகளை ஒழிக்க நாம் எடுக்கும் முதல் அடியாக இருக்கும்... ஆனால் இதை அரசாங்கம் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்... சாதிகளை வைத்து பிழைப்பு நடத்தும் நம் ஆட்சியாளர்கள் இதற்கு முன் வருவார்களா??

ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரை:

"பள்ளிக்கூடங்களில் சாதியைக் குறிப்பிட்டே தீரவேண்டும் என்று மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது" என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூறியுள்ளது மறுமலர்ச்சிக்கான புதிய திருப்பு முனை!

சாதிகள் பட்டவர்த்தனமாகத் துவங்குவதே, "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று உரக்க ஓதப்படும் பள்ளிக்கூடங்களில் இருந்துதான்! இன்றைக்கும் சில கிராமத்துப் பள்ளிகளில் சாதி அடிப்படையிலான சலுகைகளை விநியோகிக்க, மாணவர்களை சாதிப் பெயர் சொல்லி அழைப்பதையும், அவர்கள் கூனிக் குறுகுவதையும் காண முடிகிறது!

தமிழகத்தை எடுத்துக்கொண்டால்... மலைச் சாதியினர்/தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற வகுப்பினர் என்ற நான்கு பிரிவுகளைப் பொறுத்தே அரசு சலுகைகள் அமைகின்றன. சாதியோ அதன் உட்பிரிவோ இதற்குத் தேவைப்படுவதில்லை! எனவே, "இனி வருவாய்த் துறையினர் தருகின்ற சான்றிதழ், சாதியைக் குறிக்கும் சான்றிதழாக இருக்காது. மேற்கண்ட நான்கில் ஒரு பிரிவைக் குறிப்பிடும் சான்றிதழாகத்தான் இருக்கும்" என்பதையே சட்டமாக்கி, அதை முழுமையாக அமல்படுத்தலாம்.

இதைச் செய்யும்போது, முதலில் சில அதிர்வுகளும் குழப்பங்களும் ஏற்படத்தான் செய்யும்! ஆனால், சாதி என்ற அடையாளத்தை இழந்தாலும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நியாயமான உரிமைகளையும் சலுகைகளையும் யாரும் இழக்கமாட்டார்கள் என்பதை நடைமுறையில் அரசாங்கம் உறுதியோடு அமல்படுத்திக்காட்டினால்... சாதி ஒரு பொருட்டாகத் தோன்றாமல் போகும்.

சாதி அடையாளத்தைப் பிரதானமாக வைத்திருக்க விரும்புவோரின் மனங்களில் வேண்டுமானால், அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். இப்போதைக்கு ‘சாதி’யை காகிதங்களில் இருந்து அழிப்போம்.

காலத்தின் ஓட்டத்தில் அவரவர் எண்ணங்களில் இருந்தும் ‘சாதி’ அடையாளம் தானாகவே நழுவிப்போகும்... பின், சமத்துவத்தை அணிகலனாக்கி சமுதாயம் மிடுக்கோடு நடைபோடும்!

------------------------------------
ஆனந்த விகடன் (26.09.2007)

2 comments:

Unknown said...

இந்து மதவெறி அமைப்புகள், இசுலாமியத் தீவிரவாதிகளைப் போல குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்ற பொது கருத்து அடிப்படையில் ஆதாரமற்றது.
சமீபத்தில் தென்காசியில் தங்கள் அலுவலகத்திற்கு தாங்களே குண்டு வீசி அதை மதகலவரமாக மாற்ற முயற்சி செய்தது RSS அமைப்பு.

இது ஒன்றும் அவர்களுக்கு புதிது அல்ல. கடந்த ஆண்டு ஏப்ரல் 6 அன்று மராட்டிய மாநிலம் நாண்டட் நகரில் ஓய்வு பெற்ற நீர்ப்பாசனத்துறைப் பொறியாளர் ஒருவரின் வீட்டில் அதிகாலையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்தது. மூன்று பேர் சம்பவ இடத்தில் மாண்டு போனார்கள், ஒருவர் தப்பி ஓடிவிட்டார். தப்பிய நபரை கைது செய்து விசாரித்த போது பல்வேறு இந்து பண்டிகையின் போது குண்டுவெடிப்பு நடத்துவதற்காக சேர்த்து வைத்த மருத்துகள் வெடித்தது என்று உண்மையை ஒப்புக்கொண்டார். உள்ளூர் போலீஸ் பட்டாசு விபத்து என்று பூசி மறைத்து விட்டது. இறந்தவர்களுக்கு RSS, VHP மற்றும் பஜ்ரங் தள் போன்ற அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் “ஆறுதல்” கூறியிருக்கிறார்கள். பின்னர் இவ்வழக்கு பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்புகளினால் பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் படையால் அப்போது விசாரிக்கப்பட்டன. அதன் பிறகு மேலும் பல உண்மைகள் வெளிவந்தன.


இந்த மாதம் 17 தேதி திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கண்ணூர் அருகே RSS பிரமுகர் வீட்டில் குண்டு வெடித்து சிறுவன் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் மாலூர் பகுதியை சேர்த்த ஷைஜு (25), அவருடைய தாய் ஷைலஜா (50), தங்கையின் மகன் ஜிபின் (12) படுகாயம் அடைந்தவர்கள். குண்டு வெடிப்பில் ஷைஜுவின் வீட்டு தரை மட்டமானது. மாலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதன் பிறகு உண்மை வெளிவரும். இதில் ஷைஜு உள்ளூர் RSS பிரமுகர் என்பது குறிப்பிட்டதக்கது.
ஆதாரம்: தினகரன் 17-02-2008.

langlieuhlman said...

Casino & Slots - Drmcd
The 안성 출장안마 official game room and lobby of Vegas Casino & Slots brings 거제 출장안마 you 광명 출장마사지 an immersive experience 창원 출장안마 of gaming and thrilling  Rating: 4 · ‎3 reviews 부천 출장안마 · ‎Free